லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி பணம், மொபைல் பறிப்பு புதுச்சேரி வாலிபர்கள் 2 பேர் கைது
கண்டமங்கலம்: டிரைவர்களை கத்தியால் குத்தி ரூ.57 ஆயிரம் மற்றும் மொபைல் போன்களை பறித்துச்சென்ற வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்துார் அடுத்த கொளத்துார் தொகுதியை சேர்ந்தவர் அருணாசலம் வயது 43; லாரி டிரைவர்.
இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அருணாசலம் கடந்த ஆக., 17ம் தேதி மதுரையில் இருந்து புதுச்சேரி திருபவனைக்கு அரசி லோடு ஏற்றிச்சென்றார்.



