காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து - ஐகோர்ட்
காசோலை மோசடி வழக்கில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நடிகர் விமலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னர் வகையறா படத்தின் தயாரிப்புக்காக நடிகர் விமல், பைனான்சியர் கோபி என்பவரிடமிருந்து பெற்ற 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்கும் வகையில் விமல் காசோலை வழங்கியுள்ளார். விமல் வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்ததையடுத்து, விமலுக்கு எதிராக பைனான்சியர் கோபி, சென்னை 11 வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கில் ஜூலை 23ல் தீர்ப்பளித்த நீதிமன்றம், விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், காசோலை தொகையை கோபி-க்கு திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
