இது பட்டாம்பூச்சி மாதம்
மதுரை: செப்டம்பர் மாதம் பட்டாம்பூச்சி மாதமாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
மதுரை அமெரிக்கன் கல்லுாரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ராஜேஷ் கூறியதாவது:
பட்டாம்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செப். மாதம் பட்டாம்பூச்சி மாதமாக, இந்தாண்டு ‘நடை, கவனி, பதிவு, பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பட்டாம்பூச்சிகளைப் பார்வையிட்டு ஆவணப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் செப். மாதம் பட்டாம்பூச்சிகளைக் கண்காணிக்க ஏற்ற காலம். பருவமழைக்குப் பிந்தைய தாவர வளர்ச்சி, பூக்கள், வானிலை ஆகியவை பட்டாம்பூச்சிகளின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன.

