நேர்மையான வழியில் நல்ல பெயரை எடுங்கள்: ஐகோர்ட் நீதிபதி அட்வைஸ்
விழுப்புரம்: சட்டக்கல்லுாரி படிப்பை முடித்த மாணவர்கள் தொழிலில் பொறுமையாக செல்வதோடு, எந்தவொரு குறுக்கு வழியையும் கையாளாமல் பயணிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரியில் நடந்த 2வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய நம்மிடம் கடின உழைப்பு, விடாமுயற்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்களுடைய தாரக மந்திரம் எதுவாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் இலக்கை நீங்கள் மனதார நேசிக்க வேண்டும்.


