தசராவை துவக்கி வைக்க நீதிபதி நாகரத்னாவை தேர்வு செய்ய எம்.எல்.சி., தினேஷ் கோரிக்கை
பெங்களூரு: 'மைசூரு தசரா திருவிழாவை துவக்கி வைக்க, கர்நாடகாவை சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னாவுக்கு, அழைப்பு விடுக்க வேண்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.சி., தினேஷ் கூலிகவுடா வலியுறுத்தினார்.
இது குறித்து, இவர் முதல்வர் சிவகுமாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
மைசூரு தசரா என்பது, கர்நாடகாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை, உலகுக்கு அறிமுகம் செய்யும், சர்வதேச உற்சவமாகும். மாநிலத்தின் பெருமையை உயர்த்துகிறது.


