"விகடனால் பேச்சாளரானேன்!"
ஒரு தனியார் நிறுவனம் அவர்களின் ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஒரு சாஃப்ட்வேர் டெவலப் செய்யச் சொல்லியிருந்தது.
“விகடன் வந்துருச்சா..?”
ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஈரோடு, வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் இருக்கும் புத்தகக் கடையில் அதிகாலையிலேயே நான் இருப்பேன். பல நேரங்களில் இதழ் கடைக்கு வந்திருக்காது. காத்திருத்து வாங்கிச் செல்வேன். வெறும் க்ரைம் நாவல்கள் மட்டுமே எனக்கு அறிமுகமாகி, அவற்றையே படித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஒருமுறை பாட்டி வீட்டுக்குப் போனபோது அங்கிருக்கும் என் மூன்றாவது சித்தப்பாவின் படிப்பறையில் இருந்த ஆனந்த விகடன் என் கவனத்தை ஈர்த்தது.
புரட்டிப் பார்த்தபோது, ‘துக்கடா’, ‘ரெட்டைவால் ரெங்குடு’ என விதவிதமான கட்டுரைகளும், பிரபஞ்சனின் கதையும் என்னை உள்ளே இழுத்துப்போட்டன. சுத்தமான பேச்சுத் தமிழாகவும் இல்லாமல், எழுத்துத் தமிழாகவும் இல்லாமல் ஓர் எளிய மனிதனின் மொழியில் இருந்த விகடனின் நடை என்னை வசியம் செய்தது. பள்ளிப் பேச்சுப்போட்டியில் சுத்தத் தமிழில் பேச முயன்று தோற்றுப்போன நான், விகடன் வாசிக்கத் தொடங்கிய பிறகு அதனுடைய எளிய நடையில் என் பேச்சையும் மாற்றி வெற்றி கொண்டேன்.

