கொட்டமேடு நீர்ப்பாசன கால்வாய் துார்வாரும் பணி தீவிரம்
திருப்போரூர்:கொண்டங்கி ஏரியிலிருந்து கொட்டமேடு வழியாக செல்லும் நீர்ப்பாசன கால்வாயை துார்வாரும் பணி நேற்று தொடங்கியது.
திருப்போரூர் ஒன்றியத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 63 ஏரிகள் உள்ளன. இதில், பெரிய ஏரிகளுள் ஒன்றாக கொண்டங்கி ஏரி விளங்குகிறது.
இந்த கொண்டங்கி ஏரி, 650 ஏக்கர் பரப்பு உடையது. இந்த ஏரி, 0.2 டி.எம்.சி., கொள்ளளவையும், 16.11 அடி ஆழம் கொண்டது. இந்த ஏரி நீரை நம்பி, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, கீழூர், கொட்டமேடு, மேலையூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராத்தினர் 2,000 ஏக்கரில் விவசாய பணி மேற்கொண்டு வருகின்றனர்.
