கூட்டுறவு வங்கி தலைவர் பதவிக்கு கடும் போட்டி
பெங்களூரு: கூட்டுறவு தலைமை வங்கி தலைவர் பதவியை கைப்பற்ற, காங்கிரசில் கடும் போட்டி எழுந்துள்ளது.
கர்நாடக அரசின் கூட்டுறவு துறையின் தலைமை வங்கி பெங்களூரில் இதன் தலைவராக இருந்த பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பெல்லி பிரகாஷ் பதவி காலம், கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. புதிய தலைவரை தேர்வு செய்ய, கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடப்பதாக இருந்தது.
அப்போதைய முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ராஜண்ணா, தற்போதைய முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர் எம்.எல்.சி., ரவி இடையில் தலைவர் பதவிக்காக போட்டி எழுந்தது.

