நிதி நெருக்கடியா, நீதி நெருக்கடியா..? - 32-லிருந்து 14 ஆகக் குறையும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள்!
1,000-க்கும் குறைவான வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள், சுமுகமான `மாற்று முன்மொழிவு’களைப் பின்பற்றிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கினர்.
`தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் எண்ணிக்கை 32-ல் இருந்து 14 ஆகக் குறைப்பு; 18 ஆணையங்கள் மூடப்படும் அல்லது அருகிலுள்ள ஆணையங்களோடு இணைக்கப்படும்’ எனத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.
`இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதல்படி செயல்படுத்தப் பட்டுள்ளது. குற்றங்கள் குறையக் குறைய நுகர்வோர் ஆணையங்கள் குறைவதுதான் சரி’ என்று அரசு ஒரு பக்கமும், `இப்படிக் குறைப்பதால் மக்கள் வழக்கு நடத்த பல மைல் தூரம் செல்ல வேண்டும்’ என்று வழக்கறிஞர்கள் மறுபக்கமும் விவாதம் செய்து வருகின்றனர்.

