வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
கரூர்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட, பழுதடைந்துள்ள நிழற்கூடங்களை, சீரமைக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில், பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் போன்றவை ஜரூராக நடந்து வருகிறது.
இதனால், கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கரூருக்கு பல்வேறு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர்.

