விவசாயிகளிடம் மாமூல் கேட்டதாக புகார் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., இடமாற்றம்: கடலுார் எஸ்.பி., அதிரடி
சிதம்பரம்: சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் பொன்னேரியில் கடந்த 2ம் தேதி, வண்டல் மண்ணை சிதம்பரம்- சீர்காழி புறவழிச்சாலை வழியாக டிராக்டரில் கொண்டு சென்றனர்.
அப்போது, சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் இளவரசன், சப் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி ஆகியோர், அனுமதியின்றி வண்டல் மண் கொண்டு சென்றதாக கூறி வாகனங்களை பறிமுதல் செய்தனர்.