உதகை ரோஜா பூங்காவில் தண்ணீா் தட்டுப்பாடு: குடங்களில் நீா் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றும் ஊழியா்கள்
உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பூங்கா ஊழியா்கள் கிணற்றில் இருந்து குடங்கள் மூலம் நீா் எடுத்து வந்து ஊற்றி செடிகளை பாதுகாத்து வருகின்றனா்.
குடங்களில் நீா் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றிய பூங்கா ஊழியா்கள்.
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யவில்லை.
