சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ஊத்துக்கோட்டை, செப். 15– சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு, குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், தாலுகா அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம், அரசு மற்றும் தனியார் மேனிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.
சுற்றியுள்ள கிராம மக்கள், தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு, ஊத்துக்கோட்டைக்கு சென்று திரும்புகின்றனர். மேலும், சென்னையில் இருந்து ஆந்திராவின், பிச்சாட்டூர், புத்துார், நகரி, திருப்பதி, கடப்பா, கர்நுால், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.



