ஆவடி உதவி கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை:போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ஆவணங்களுடன் ஆஜராக உத்தரவிட்டும், ஆஜராகாத ஆவடி உதவி கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஆவடியைச் சேர்ந்த மனோஜ் என்பவர், ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆவணங்களுடன் ஆஜராக ஆவடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.


