ரோடுகள் சந்திப்பில் பஸ் ஸ்டாப் நெரிசலால் திணறும் தேவனுார்புதுார்
உடுமலை: உடுமலை தேவனுார் புதுாரில், மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் நெரிசல், விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, பொள்ளாச்சி தாலுகா எல்லையில் தேவனுார்புதுார் உள்ளது. இந்த இரண்டு தாலுகாவிலிருந்தும், ஆனைமலை -– பழநி வழித்தடத்திலும், வால்பாறை செல்லும் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
அதே போல், உடுமலை, பொள்ளாச்சி பகுதியிலிருந்தும் சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுப்புறத்திலுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப்பகுதியாக உள்ளதால், அதிகளவு மக்கள் வந்து செல்கின்றனர்.

