தொடர் விடுமுறை எதிரொலி :டோல்கேட்டில் டிராபிக் ஜாம்
விக்கிரவாண்டி: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களை நோக்கி வாகனங்கள் அணிவகுத்ததால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி நாளை 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று சனி மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னையிலிருந்து ஏராளமான வாகனங்கள் நேற்று காலை முதலே தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்ததால் சென்னை - திருச்சி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.




