மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவ கல்லுாரிகள் நெருக்கடி
சென்னை: தனியார் மருத்துவ கல்லுாரிகளில், கூடுதல் கட்டணம் கேட்டு வலியுறுத்தப்படும் நிலையில், அதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு என்ன செய்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை, சிறப்பு கமிட்டி வாயிலாக, தமிழக அரசு நிர்ணயித்து வருகிறது. அதன்படி ஆண்டுக்கு, 13.50 லட்சம் ரூபாய் வரை ஒரு மாணவரிடம் கல்வி கட்டணம் வசூலிக்கலாம்.
மேலும், விடுதி, உணவு, பஸ் வசதிக்கு, 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை தனியொரு மாணவரிடம் வசூலிக்கின்றனர்.
