முதல்வர் விஜயின் வாகனத்தை மறிக்க முயன்றவர்களால் பரபரப்பு
சென்னை: முதல்வர் விஜய், நேற்று சட்டசபைக்கு வரும்போது, தலைமை செயலகம் அருகே, அவரது வாகன அணிவகுப்பை சிலர் மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன், 26. இரண்டு பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில், அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
கடந்த மார்ச் 8ல், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவர் இறந்தார். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




