செங்கை – கடற்கரை ‘ஏசி’ மின் ரயில் தினம் 30 நிமிடம் தாமதம் என புகார்
சென்னை: செங்கல்பட்டு – கடற்கரை ‘ஏசி’ மின்சார ரயில், தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் முதல் முறையாக, சென்னை கடற்கரை - – தாம்பரம் –- செங்கல்பட்டு வழித்தடத்தில், 2025 ஏப்., மாதம் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் எட்டு சேவை மட்டுமே இருந்த நிலையில், பயணியரின் விருப்பத்துக்கு ஏற்ப, நேரம் மாற்றியமைக்கப்பட்டு, கூடுதல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக, பயணியர் குற்றம்சாட்டி உள்ளனர்.


