நெல் அறுவடை இயந்திர பழுது பார்ப்பின் போது கிளீனர் பலி
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் நெல் அறுவடை இயந்திர பழுது பார்ப்பின் போது பயிர்களை வெட்டும் கார்டர் பார் விழுந்து கிளீனர் இறந்தார்.
சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் பாண்டியன், 36; நெல் அறுவடை இயந்திர வாகனத்தில் கிளீனராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை நெல் அறுவடை இயந்திரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இயந்திரத்தில் பயிர்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் முன் பகுதியான கார்டர் பார் பாண்டியன் மீது விழுந்தது.


