மேற்குவங்க பெண், குழந்தையை கொலை செய்தது ஏன்? கொலையாளி ‘பகீர்’ வாக்குமூலம்
பாலக்காடு: கேரள மாநிலம், அட்டப்பாடி அருகே இளம்பெண் மற்றும் பெண் குழந்தையை கொலை செய்த வழக்கில், அப்பெண் கர்ப்பமாக இருந்ததால் கொலை செய்ததாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே, கடந்த 6ம் தேதி புதூர் சீரக்கடவு பகுதியில், பவானி ஆற்றில் மூன்று சாக்கு மூட்டைகள் மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் அவற்றை மீட்டு சோதனை யிட்டபோது, பெண் மற்றும் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலைகள் மற்றும் உடல் பாகங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்வதற்காக மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள் என கண்டறியப்பட்டது. மேலும் இந்த கொலையை செய்தது மேற்கு வங்க மாநிலம் அலிப் பூர்துவார் சோவாகஞ்சன் பகுதியை சேர்ந்த புரோவத் தாஸ், 38, என்பதும் விசாரணையில் தெரியவந்தது.


