திண்டுக்கல்லில் அதிநவீன ஆதார் சேவை மையம் திறப்பு
தனித்துவ அடையாள ஆணையத்தின் முன்பதிவு இணையதளமான https://bookappointment.uidai.gov.in/ மூலமாகவும், ஆதார் சேவை மையங்களில் ஆதார் சேவைகளைப் பெறுவதற்கு மக்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
திண்டுக்கல் நகரில் வசிப்போருக்கு ஆதார் சேவைகளை எளிதில் வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திண்டுக்கல்லில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆதார் சேவை மையத்தை இன்று (04 செப்டம்பர் 2026) செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது.
திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர் ஜெயபாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த ஆதார் சேவை மையத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலகப் பிரிவு அதிகாரி, பிற அதிகாரிகள், ஆதார் சேவை மையப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


