பஞ்சமி நிலம் குறித்து பேச வி.சி.க.,வுக்கு தகுதி இல்லை பா.ஜ., தேசிய செயலர் கருத்து
சென்னை: பா.ஜ., தேசிய செயலராக பொறுப்பேற்றுள்ள வெங்கடேசனுக்கு, சென்னை, தி.நகரில் உள்ள பா.ஜ., தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
பஞ்சமி நிலம் விவகாரத்தில், பா.ஜ., உட்பட அனைவரும் அரசியல் செய்வதாக, வி.சி.க.,வைச் சேர்ந்த தமிழக அமைச்சர் வன்னி அரசு கூறுவதில் உண்மை இல்லை.
பஞ்சமி நிலம் குறித்து பேச, வி.சி.க.,வுக்கு தகுதியில்லை. திண்டிவனம் அருகே, தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர், கல்லுாரி கட்டும் இடம், பஞ்சமி நிலம் என போராடிய வி.சி.க., நிர்வாகிகளை, அக்கட்சி தலைவர் திருமாவளவன் நீக்கினார்.



