சோபான சங்கீத சபை 5வது ஆண்டு விழா
பாலக்காடு: பாலக்காட்டில், சோபான சங்கீத கலைஞர்களின் கூட்டமைப்பான ‘சோபான சங்கீத சபை’யின் 5-வது ஆண்டு விழா, வரும் 20ம் தேதி நடக்கிறது.
கேரளாவின் பாரம்பரிய இசை வடிவமான சோபான சங்கீதத்தை பக்திப்பூர்வமாக இசைக்கும் மூத்த கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில், இந்த ஆண்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு பாணிகளில் இசைக்கப்படும் இந்த பாரம்பரிய கலையின் தூய்மை மற்றும் தனித்துவம் குறையாமல், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
