ரெட்டிபாளையம் ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதியின்றி பயணியர் அவதி
சிங்கபெருமாள் கோவில்: ரெட்டிபாளையம் ரயில் நிலையத்தில், போதிய பராமரிப்பின்றி கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம் ரயில் தடத்தில் உள்ளது ரெட்டிபாளையம் ரயில் நிலையம். இந்த தடத்தில் திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்களும், காஞ்சிபுரம், அரக்கோணம் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ரெட்டிபாளையம், சாஸ்திரம்பாக்கம், சீத்தனஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பயணியர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.



