“கழிவு நீரால் தண்ணீர் விஷமாகுது... ஊரே காலியாகுது!”
டி.என்.பி.எல் ஆலையால் கதறும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள்!
“தண்ணியைக் குடிச்சா நோய் வருது... வயல்ல விட்டா பயிர் கருகுது... மாட்டுக்குக் குடுத்தா மாடே செத்துப்போகுது!” - இப்படிக் கதறுகிறார்கள் கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள். ஒருகாலத்தில் தங்கள் வாழ்வாதாரமாக இருந்த நிலமும், நீரும், கால்நடைகளும் பாழாகி பலியாகிவருவதாகக் கூறி அதிரவைக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம், மணப்பாறைக்கு அருகே மொண்டிப்பட்டியில் இயங்கிவரும் டி.என்.பி.எல் காகித ஆலையின் கழிவுநீர்தான் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். “நிலத்தடி நீரே விஷமாகிடுச்சு... ஊரையே காலி பண்ண வேண்டியதுதான்!” என அவர்கள் வைக்கும் புகார்களின் பின்னணி என்ன... உண்மையிலேயே ஆலையின் கழிவுநீரால் இந்தப் பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனவா... அந்தக் கிராமங்களுக்குள் நேரில் சென்றோம்.


