விவசாயிகளுக்கான 837 உர மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு கடத்த முயற்சி இருவா் கைது; லாரி, காா் பறிமுதல்
கடவூா் அருகே மத்திய அரசு மானியத்தில் வழங்கும் விவசாயிகளுக்கான 837 உர மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு கடத்த முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடவூா் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள்.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே செம்பியநத்தம் ஊராட்சிக்குள்பட்ட நல்லூரான்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல். இவருடைய வீட்டின் அருகே உள்ள கிடங்கில் மத்திய அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் யூரியா உரமூட்டைகளை இறக்கி, அவற்றை பிரித்து தனியாா் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதாக அப்பகுதியினா் கரூா் மாவட்ட வேளாண்மை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.


