‘‘நடிகை த்ரிஷா திருச்சியில் போட்டியிடலாம்!’’
அரசியல் கொள்கைகள், கருத்துகள் சார்ந்து எவ்வளவு விமர்சனங்கள் வேண்டுமானாலும் வைக்கலாம்.
தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், சோனியா காந்தி குறித்து பா.ஜ.க மாநில இளைஞரணித் தலைவர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்ட கருத்துக்கு எதிராகக் கொந்தளித்து, “அவதூறாகப் பேசினால் சட்டப்படி நடவடிக்கை” என எச்சரித்திருக்கிறார். சமூக ஊடக அரசியலில் காங்கிரஸின் அடுத்தகட்ட வியூகம், தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட கேள்விகளை விஜய் வசந்த்தின் முன் வைத்தோம்.
``அண்ணாமலை போன்று காங்கிரஸில் வார் ரூம் உருவாக்குவீர்களா?’’
``முதற்கட்டமாக ‘சமூக ஊடகப் போராளிகள்’ என்ற பெயரில் 50,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டிருக்கிறோம். சமூக வலைதளங்களில் செயல்படுவோர், பேச்சாளர்கள், கன்டென்ட் கிரியேட்டர்ஸ் ஆகியோரை ஒன்றிணைத்து, மண்டல மற்றும் மாவட்ட அளவில் வலிமையான கட்டமைப்பை உருவாக்கி, காங்கிரஸின் கொள்கைகளை மக்களிடம் ஒரே குரலில் எடுத்துச் செல்வோம்.’’





