வடமாநில வாலிபர்கள் இருவர் கைது
வியாசர்பாடி, செப். 18- வியாசர்பாடி, எஸ்.எம்.நகரில் வியாசர்பாடி தனிப்படை போலீசார் நேற்று ரோந்துப்பணியில்
வியாசர்பாடி, எஸ்.எம்.நகரில் வியாசர்பாடி தனிப்படை போலீசார் நேற்று ரோந்துப்பணியில் இருந்த போது, இரண்டு ராஜஸ்தான் வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 9,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் அரை கிலோ இருந்தது கண்டறியப்பட்டது.
பிடிபட்டவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த சுகாஷ் கோரா, 23 மற்றும் விகாஷ், 22 என்பதும், இருவரும் மாதவரம் மற்றும் கொசப்பேட்டையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வருவதும், போதை வஸ்துகளை மாத்திரை மற்றும் எண்ணெய் ஆக விற்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா ஆயில், 300 கிராம் மெத்த பெட்டமைன் கைப்பற்றப்பட்டது.
ஒடிசாவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.