'சீமான் சொல்வதெல்லாம் பொய்; ஒரு எம்பி சீட்டுக்காக கூட்டணி போன தேமுதிக'-கடுமையாக விமர்சித்த வன்னியரசு
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தலை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்துக்களுக்கும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் விமர்சனங்களுக்கும் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பேட்டியில் மிகக் கடுமையான பதிலடிகளைத் தந்துள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கூறியதாவது,"சீமான் அவர்கள் பல பொய்களைச் சொல்லி வருகிறார். அதில் இதுவும் ஒரு பொய். அவர் அண்டப்புழுகு, ஆகாசப் புழுகு என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒரு புழுகுபவர் தான் சீமான் என்பது இந்த உலகத்துக்கே நன்றாகத் தெரியும். நாம் அதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. அவர் உண்மையிலேயே இடதுசாரிகளுக்கு (கம்யூனிஸ்ட்டுகளுக்கு) ஆதரவு கொடுப்பதாக இருந்தால், இடதுசாரிகளோடு நாம் நிற்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இன்று வேட்புமனு பரிசீலனை நடக்கும் கடைசி நாளான இன்றே நாம் தமிழர் கட்சியின் வேட்புமனுக்களை அவர் திரும்பப் பெற வேண்டும்.
உண்மையிலேயே தெரிந்துதான் நான் ஆதரவு கொடுத்திருப்பேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சீமான் கூறினார். அப்படி அவர் சொன்ன செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்றால், அவர் இன்றே மனுவைத் திரும்பப் பெற வேண்டும். அப்படி அவர் திரும்பப் பெற்றுக்கொண்டால் அவர் சொன்ன செய்தி உண்மை என்று எடுத்துக்கொள்ளப்படும். இல்லையென்றால் அவர் சொன்ன பல பொய்களில் இதுவும் ஒரு பொய் என்று இந்த உலகமே அவரைத் தூற்றும்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


