சிவகங்கை அருகே மரத்தில் கார் மோதி விபத்து: 2 பேர் பலி, மூவர் காயம்
சிவகங்கை அருகே மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதுப் பற்றி...
சிவகங்கை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் இருந்து காளையார் கோயிலுக்கு சிவகங்கையைச் சேர்ந்த 5 பேர் காரில் செல்லும் பொழுது ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் கொல்லங்குடி அருகே உள்ள தனியார் பள்ளி எதிரில் இருந்த மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
இவ்விபத்தில் காரில் பயணித்த சிவகங்கை சாஸ்திரி தெருவைச் சேர்ந்த ச. கார்த்திகேயன்(39), சிவகங்கை நேரு பஜார் பகுதியைச் சேர்ந்த மு. ஷேக்முகமது(38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
