ரூ.20 லட்சம் நகை பறிக்க முயற்சி ஜெயிலர் மகன் உட்பட 4 பேர் கைது
திருச்சி: திருச்சியில், டிராவல்ஸ் மேலாளரிடம், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிக்க முயன்ற, சென்னை புழல் சிறை ஜெயிலர் பாரத் கென்னடியின் மகன் சுதன்ராம் தேவேந்திரா, 32, உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன், 52. மலீஷா டிராவல்ஸ் நிறுவன மேலாளர்.
இவர், நகைகளை மொத்தமாக வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வருகிறார்.


