மலேஷியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்கிறது தமிழகம்
சென்னை: தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் ஆற்று மணல், மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில், 13 இடங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள், அமலாக்கத் துறை வழக்கு காரணமாக, 2023ல் மூடப்பட்டன. புதிதாக, 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க, கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர் பிரச்னையால் இப்பணிகள் முடங்கின.
கருங்கல் உடைப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களிடமிருந்து தரமில்லாத, எம் சாண்ட் விற்பனைக்கு வருகிறது. இதை பயன்படுத்தி கட்டப்படும் கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.




