விஜய் பயணம்! லண்டனில் திரிஷாவை கண்காணிக்கும் உளவுத்துறை!
வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் செல்கிறார் முதல்வர் ஜோசப் விஜய். இதற்காக, மத்திய அரசால் வழங்கப்படும் டிப்ளமேட் பாஸ்போர்ட் பெறுவதற்கு சென்னை அண்ணாசாலையிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றார் விஜய். இந்த நிலையில், ஏற்கனவே லண்டனில் இருக்கும் நடிகை திரிஷாவை கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கவர்னர் கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சர்வதேச பயணங்களை மேற்கொள்ள சிறப்பு சலுகைகளைக் கொண்ட ராஜதந்திர (டிப்ளமேட்) பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. ஆட்சிப்பொறுப் பில் இருப்பவர்கள், இந்த டிப்ளமேட் பாஸ்போர்ட் இல்லாமல் சாதாரண பாஸ்போர்ட்டில் வெளி நாடுகளுக்குச் செல்லக்கூடாது.
இத்தகைய பாஸ்போர்ட்டில் வெளிநாடு களுக்கு செல்பவர்கள், அங்கு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அந்த நாட்டு காவல்துறை இவர்களை கைது செய்யமுடி யாது. சம்பந்தப்பட்டவர்கள் இந்தியா திரும்பிய பிறகு, இந்திய அரசாங்கத் திடம் புகார் தெரிவித்து இந்திய அரசின் அனுமதியுடன்தான் சம்பந்தப்பட்ட வெளிநாடுகள் சட்ட நடவடிக்கையை எடுக்கமுடியும். அந்தளவுக்கு பாதுகாப்பு மிகுந்தது டிப்ளமேட் பாஸ்போர்ட்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
