பிரஜ்வல் அறையில் மொபைல் போன்: குமாரசாமி சந்தேகம்
ஹாசன்: ''பிரஜ்வல் ரேவண்ணா இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார். கே.பி.எஸ்.சி., - நைஸ் விவகாரம் வரும்போது, அவர் இருக்கும் சிறையில் மொபைல் போன் கண்டெடுக்கப்பட்டது எப்படி?,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுராவின் மாவினகெரே மலை அடிவாரத்தில், தன் தாயாரின் நினைவிடத்தில் நேற்று குமாரசாமி அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்கா சென்றிருந்த நான், இரண்டு நாட்களுக்கு முன் தான் திரும்பினேன். அமெரிக்கா செல்லும் முன், கே.பி.எஸ்.சி., முறைகேடு, பிடதி டவுன்ஷிப், நைஸ் முறைகேடுகள் என பல பிரச்னைகள் எழுப்பியிருந்தேன்.


