பட்டப்பகலில் 3 வாலிபர்களை வெட்டி கொல்ல முயற்சி புழல் காவல் நிலையம் எதிரே ரவுடி கும்பல் அட்டகாசம்
புழல்: புழல் காவல் நிலையம் அருகே பட்டப்பகலில், காரில் சென்ற மூன்று வாலிபர்களை வழிமறித்து, பட்டாக்கத்திகளால் வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கும்பலை, புழல் போலீசார் தேடி வருகின்றனர்.
திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் லோகேஷ், 22. தன் நண்பர்களான ரெட்டேரியைச் சேர்ந்த ஜீவா, 22, மற்றும் ‘மொட்டை’ கார்த்திக் ஆகியோரை, தன் ‘டட்சன்’ காரில் அழைத்துக்கொண்டு, மாதவரம் நோக்கி, நேற்று சென்று கொண்டிருந்தார்.
புழல், ஜி.என்.டி., சாலையில் மாலை 4:30 மணிக்கு சென்றபோது, பின்னால் ‘டியோ’ ஸ்கூட்டரில் பட்டாக்கத்திகளுடன் வந்த ஐந்து பேர், காரை நிறுத்தும்படி கூறினர்.