தவறான உறவுக்கு அழைத்து பெண்ணை தாக்கியவர் கைது
மயிலாப்பூர்:பெண்ணை அழைத்து சென்று, தவறான உறவுக்கு வற்புறுத்தி கத்தியால் தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
துரைப்பாக்கத்தை சேர்ந்த, திருமணமான 25 வயது பெண் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 6ம் தேதி நான் வீட்டில் இருந்தபோது, 'எனக்கு அறிமுகமான மயிலாப்பூரைச் சேர்ந்த அறிவழகன், 32 என்பவர் உங்களிடம் தனியாக பேச வேண்டும்' எனக் கூறி ஆட்டோவில் மயிலாப்பூர் பாஷா தோட்டம் சாந்தோம் சாலைக்கு அழைத்துச் சென்றார்.
