‘கேரள வனத்துறை நவீனமயமாக்கம்’
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வாளையார் வனப்பயிற்சி மையத்தில், பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
இதில் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கேரள வனத்துறை அமைச்சர் ஷிபு பேபிஜான் பேசியதாவது:
மனித – -வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த, அதிநவீன வசதிகளுடன் வனத்துறை முழுமையாக நவீனமயமாக்கப்படும். களத்தில் வனவிலங்குகளை எதிர்கொள்ளும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, நவீன உபகரணங்கள் மற்றும் கரடுமுரடான பாதைகளிலும் இயங்கும் ஏ.டி.வி., ரக சிறப்பு வாகனங்கள் வழங்கப்படும்.
