ஒரு மாதமாக கப் அடிக்கும் திருவேங்கிடபுரம் பகுதி
பொன்னேரி:திருவேங்கிடபுரத்தில், ஒரு மாதமாக குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால், துர்நாற்றமும் ஏற்படுகிறது; தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம், உப்பரபாளையம் பகுதிகளில், 2,000க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள், பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் ஓரங்களிலும், அதே பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்களிலும், குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
