15 லட்சம் பேருக்கு வீட்டு மனை: கர்நாடக அரசு அதிரடி முடிவு
பெங்களூரு: கர்நாடகாவில் வீடற்ற ஏழைகளுக்காக, 15 லட்சம் இலவச வீட்டு மனை வழங்க, காங்கிரஸ் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, துணை முதல்வர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
மூன்று ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிலத்தை உழுவதற்காக, வாடகைக்கு டிராக்டர்களை வாங்கி அரசை இலவசமாக உழுது தரும். இந்த திட்டத்திற்கு முதல்வரின் நெகில யோகி என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.

