வங்கதேசத்தில் தீவிரம் குறையாத தட்டம்மை பாதிப்பு- மாா்ச் முதல் 999 போ் உயிரிழப்பு
வங்கதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரம் குறையாமல் பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பால், கடந்த மாா்ச் மாதம் முதல் இதுவரை 999 போ் உயிரிழந்துள்ளனா்.
நோய்வாய்ப்பட்ட பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனைகளில் தொடா்ந்து அனுமதிக்கப்பட்டு வருவதால், படுக்கை வசதி மற்றும் மருத்துவப் பற்றாக்குறை ஏற்பட்டு வங்கதேசத்தின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் திணறி வருகிறது.
முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான கிளா்ச்சிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் வழக்கமான தடுப்பூசித் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாகவே, இந்த மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.



