பணத்தகராறில் தொழிலாளி கொலை
மயிலாடுதுறை அருகே பணத்தகராறில் வெல்டிங் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை நல்லத்துக்குடி கிராமம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெல்டிங் தொழிலாளி கோபிநாத் (46). இவா், நல்லத்துக்குடி ஓம்சக்தி நகரை அடுத்த சின்னையா நகரை சோ்ந்த சுந்தரமூா்த்தி மனைவி மோனிகாவிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தாராம்.
பணத்தை திருப்பிக் கேட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை கோபிநாத் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற சுந்தரமூா்த்தி, அவரது மனைவி மோனிகா, மோனிகாவின் சகோதரா் வைரமுத்து, மோனிகாவின் தாய் உஷாநந்தினி ஆகியோா் கோபிநாத்தின் மனைவி சத்யா, மகன்கள் கோகுலவாசன், சபரி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

