திறந்து 17 ஆண்டுகள் கடந்தும் பயன்படாத மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் தெரு நாய்களுக்கு புகலிடமாக மாற்றப்படுமா?
கோவை: பத்து கோடி ரூபாயில் 17 ஆண்டுக்கு முன் திறக்கப்பட்ட மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம், இன்னமும் குப்பை கொட்டும் இடமாகவும், திறந்தவெளி கழிப்பிடம் போலவும் பயன்படுத்தப்படுகிறது. பஸ்கள் வருவதில்லை.
ஊட்டி போன்ற வடக்கே உள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சாய்பாபா காலனியில் புதிதாக அமைக்கப்பட்டது இந்த பஸ் ஸ்டாண்ட். அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் 2010ல் திறந்து வைத்தார்.
முதல் மூன்று மாதங்கள் பஸ்கள் அனைத்தும் வந்து சென்றன. பின்னர் பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டர் மில் பகுதிகளில் மேம்பாலம் கட்டும் வேலைகள் நடப்பதை காரணம் காட்டி,போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதாக கூறி பெரும்பாலான பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டுக்குள் வருவது குறைந்தது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்தே அவை இயக்கப்பட்டன.


