விஜய் கட்சியில் கோஷ்டி மோதல்! - சேலம் பரபரப்பு !
சேலம் வடமேற்கு மாவட்டத்தில் த.வெ.க. கோஷ்டி சண்டையால் இரு துருவங்களாக பிளவுபட்டுள்ள நிலையில், நிர்வாகிகள் இடையே யான மோதலை தூண்டிவிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் சைலண்டாக ரசிப்பதாக அதிருப்தி கிளம்பியுள்ளது.
த.வெ.க.வில், சேலம் வடமேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் செந்தில்குமார். இவர் தனது தலைமையில், சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தவும், மறுநாள் மாலை ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்தவும் காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அளித்திருந்தார்.
இந்நிலையில் சங்ககிரி த.வெ.க. ந.செ. மணிகண்டன், வடமேற்கு மா.செ. தலை மையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக் கக்கூடாது என்று காவல்துறைக்கு கைப்பட கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், 'கட்சித் தலைமை உத்தரவின்படி மகுடஞ்சாவடியில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படும். சங்ககிரியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித் தால் பொதுமக்கள், கழகத் தோழர்கள், தோழிகள் மத்தியில் சலசலப்பு ஏற்படும். சங்ககிரியில் கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டாம்' என்று தெரிவித்திருந்தார்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
