நீதிமன்றத்தில் சமரச தீர்வு முகாம்: அடுத்த மாதம் துவங்குகிறது
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வுக்கான முகாம் அடுத்த மாதம் துவங்கி டிசம்பர் வரை நடைபெற உள்ளது.
புதுச்சேரி மாவட்ட சமரச தீர்வு மைய நீதிபதி அம்பிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் மூலம் தீர்த்து வைப்பதை நோக்கமாக கொண்டு, தேசத்திற்கான சமரசம் 3.0 என்ற தலைப்பில் அடுத்த மாதம் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நாடு தழுவிய சமரச தீர்வு முகாம் அந்தந்த மாவட்ட சமரச தீர்வு மையங்களில் நடைபெற உள்ளது.


