வழி தெரியாததால் விழி பிதுங்கும் விவசாயிகள்! தேவை ஒரு வாழை ஆராய்ச்சி மையம்
மேட்டுப்பாளையம்: ‘மேட்டுப்பாளையம் தாலுகாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிர் செய்வதால், வாழையிலிருந்து மதிப்புக் கூட்டிய பொருட்களை உற்பத்தி செய்யவும், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வழிகளை தெரிவிக்கவும், வாழை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்’ என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளிலும், அன்னுார், வீரபாண்டி, பவானிசாகர் ஆகிய பகுதிகளிலும் வாழை பிரதான விவசாயம். வாழைத்தார்கள், அதிகளவில் கேரளா, மும்பைக்கும் அனுப்பப்படுகின்றன. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வாழை ஆராய்ச்சி மையம், மேட்டுப்பாளையம் பகுதியில் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரமடை அரங்கநாதர் உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் முத்துசாமி கூறியதாவது:

