நடுரோட்டில் ஜெனரேட்டர் வாகன ஓட்டிகள் சிரமம்
திருப்புவனம், செப். 11- திருப்புவனம் புதுாரில் நேற்று மின் தடை என்பதால் வங்கி நிர்வாகம் நடுரோட்டில்
திருப்புவனம் புதுாரில் நேற்று மின் தடை என்பதால் வங்கி நிர்வாகம் நடுரோட்டில் ஜெனரேட்டரை வைத்து பயன்படுத்தியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக திருப்பாச்சேத்தி, கமுதி, பரமக்குடி, இளையான்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆக்கிரமிப்பு காரணமாக ரோடு சுருங்கி விட்டது. வேலை நாட்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் விலக கூட முடிவதில்லை. அடிக்கடி விபத்துக்களும் நேரிட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசார் இருந்தும் நெரிசலை தவிர்க்க முடியவில்லை.


