புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி இல்லை: மாநகர காவல் ஆணையா்
திருப்பூா் மாநகரில் புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது என மாநகர காவல் ஆணையா் எஸ். ராஜேஸ்வரி கூறினாா்.
விநாயகா் சதுா்த்தி விழாவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி தலைமையில் காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஹிந்து அமைப்புகளின் சாா்பில் முக்கிய நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் விநாயகா் சதுா்த்தியின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்து நிா்வாகிகளுக்கு காவல் ஆணையா் ராஜேஸ்வரி அறிவுரைகளை வழங்கிப் பேசியதாவது:








