வீராணம் ஏரியில் தண்ணீர் இருப்பு: சென்னைக்கு குடிநீர் அளவு குறைப்பு
காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரியில் கிடுகிடுவென தண்ணீர் அளவு சரிந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் குறைத்து அனுப்பப்படுகிறது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியில் 1.5 டி.எம்.சி (1465 மில்லியன் கன அடி) தண்ணீர் கொள்ளளவு கொண்டது. விவசாயம் டெல்டா பாசனத்திற்கு மட்டுமின்றி சென்னை குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் ஏரியில் தண்ணீர் அளவு குறைந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் சென்னை குடிநீருக்காக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு, கீழணைக்கு வந்தடைந்த தண்ணீரை வடவாற்றில் திறக்கப்பட்டு வீராணம் ஏரியில் 46.91 அடி (1,322 மில்லியன் கன அடி) தண்ணீர் சேமிக்கப்பட்டது.


