பொது –– நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி
குன்றத்துார்: படப்பையில், தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி, 4 வயது சிறுவன் இறந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குன்றத்துார் அருகே, படப்பை அடுத்த வஞ்சூவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தன் மகன் நிரஞ்சன், 4, மற்றும் உறவினர்களுடன், படப்பை, பெரியார் நகரில் உள்ள தனியார் ரிசார்டிக்கு நேற்று சென்றார்.
பெரியவர்கள் நீச்சல் குளத்தில் குளித்தனர். அதன் அருகே விளையாடி கொண்டிருந்த நிரஞ்சன், திடீரென நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மூழ்கினான்.

